பா.ஜ., சீட்டுகள் குறையுமா? மாஜி தேர்தல் கமிஷனர் மறைமுக ‛டுவிட்'
பா.ஜ., சீட்டுகள் குறையுமா? மாஜி தேர்தல் கமிஷனர் மறைமுக ‛டுவிட்'
UPDATED : ஏப் 09, 2024 01:21 PM
ADDED : ஏப் 09, 2024 12:57 PM

புதுடில்லி: முன்னாள் தேர்தல் கமிஷனர் எஸ் ஒய் குரேஷி, எக்ஸ் சமூக வலைதளத்தில் , மாம்பழம் விலையை ஒப்பிட்டு, பா.ஜ.,வை மறைமுகமாக விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
பிரசாரம்
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர்களும் இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கு மேல் வெற்றி பெறும், இதில் பா.ஜ., மட்டும் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் எனக் கூறி வருகின்றனர்.
குறையும்
இந்நிலையில், கடந்த 2010 முதல் 2012 வரை தேர்தல் கமிஷனர் ஆக பதவி வகித்த எஸ்.ஒய்.குரேஷி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
இப்போது 400பிளஸ் என்பார்கள்.
மே இறுதியில் அது 250 ஆக குறையும்.
ஜூன் முதல் வாரத்தில் இது 175 - 200 என்ற அளவில் இருக்கும்.
நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைப் பற்றி பேசுகிறேன்.
ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியது இல்லை. இவ்வாறு குரேஷி அந்த பதிவில் கூறியுள்ளார்.
விமர்சனம்
இந்தக் கருத்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் நிலையில், பா.ஜ.,வினர் குரேஷியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

