sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லோக்சபா தேர்தல்: 2வது ஆலோசகரை இழந்தது காங்.,

/

லோக்சபா தேர்தல்: 2வது ஆலோசகரை இழந்தது காங்.,

லோக்சபா தேர்தல்: 2வது ஆலோசகரை இழந்தது காங்.,

லோக்சபா தேர்தல்: 2வது ஆலோசகரை இழந்தது காங்.,

1


ADDED : ஜன 13, 2024 11:01 AM

Google News

ADDED : ஜன 13, 2024 11:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் காங்கிரஸ் ஆலோசகர் சுனில் கனுகோலுவை இழந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பதிலாக சுனில் கனுகோலு ஹரியானா, மஹா., மாநில சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்துவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆலோசகர் சுனில் கனுகோல் கர்நாடகாவை சேர்ந்தவர். சமீபத்தில் சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு சுனில் கனுகோல் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசார திட்டங்கள் வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த 2018ல், பா.ஜ.,வுக்காக செயல்பட்ட இவரை, கடந்த ஆண்டு மார்ச்சில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஆலோசகராக காங்கிரஸ் நியமித்தது. அதன் பிறகு சுனில் கனுகோலுதான் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு மாநிலங்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வந்தார். ஆனால் அவர் தற்போது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சார அணியில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து 2வது ஆலோசகரான சுனில் கனுகோலுவையும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்குப் பதிலாக சுனில் கனுகோலு ஹரியானா, மஹா., மாநில சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்துவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அணியிலிருந்து விலகினார். தற்போது 2வது முக்கிய ஆலோசகரை காங்கிரஸ் இழந்துள்ளது.






      Dinamalar
      Follow us