sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

''அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி'': ராகுல் குற்றச்சாட்டு

/

''அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி'': ராகுல் குற்றச்சாட்டு

''அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி'': ராகுல் குற்றச்சாட்டு

''அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி'': ராகுல் குற்றச்சாட்டு

19


ADDED : ஜன 18, 2024 11:09 AM

Google News

ADDED : ஜன 18, 2024 11:09 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோஹிமா: ''அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். இன்று(ஜன.,18) 5வது நாள் அசாம் மாநிலத்தில் சிவசாகர் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார்.

அநீதி

பின்னர் நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நாங்கள் மணிப்பூரிலிருந்து பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவக்கினோம். இந்த யாத்திரை இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சாதிகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. பா.ஜ., பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக நாட்டு மக்களுக்கு நிறைய அநீதி இழைத்துள்ளது.

உள்நாட்டு போர்

நாடக ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான சங்கர்தேவ் அனைவரையும் ஒன்றிணைக்க முயன்றார். அவர் அநீதிக்கு எதிராக போராடினார். இதனை தான் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மணிப்பூரில் உள்நாட்டு போர் சூழல் நிலவுகிறது. ஆனால், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. நாகாலாந்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று மக்கள் கேட்கின்றனர். அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.






      Dinamalar
      Follow us