தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்
தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்
UPDATED : டிச 11, 2025 04:43 PM
ADDED : டிச 11, 2025 03:57 PM

இட்டாநகர்: அருணாச்சல் எல்லையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து கடந்த டிசம்பர் 8 அன்று நடந்திருந்தாலும், காயமடைந்தவர்களில் ஒருவர் தலைநகரத்தை அடைந்து, அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே இது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் குறித்து அஞ்சாவ் மாவட்ட துணை கமிஷனர் மில்லோ கோஜின் கூறியதாவது:
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையோரம் உள்ள ஹயுலியாங்-சக்லகாம் சாலையில் ஒரு பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. 21 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடத்த இடம் இந்தியா-சீனா எல்லையிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் 10 ஆயிரம் அடி உயரத்திலும் உள்ள பகுதியாகும். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. இவ்வாறு மில்லோ கோஜின் கூறினார்.

