ADDED : பிப் 22, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பதர்பூர் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், லாரி கிளீனர் உயிரிழந்தார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தென்கிழக்கு டில்லி பதர்பூரில் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு ஒரு லாரி அதிவேகமாக வந்தது.திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில், லாரியில் இருந்த கிளீனர் ஹன்ஸ்ராம் பலத்த காயம் அடைந்தார். டிரைவர் பிரேம் மற்றும் மற்றொரு உதவியாளர் ஆகிய இருவரும் வண்டியில் இருந்து குதித்து தப்பினர்.
மருத்துவனையில் பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே ஹன்ஸ்ராம் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பதர்பூர் போலீசார், லாரி டிரைவர் பிரேமை கைது செய்தனர்.