விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1 லட்சம் இலவச சிகிச்சை: மஹாராஷ்டிரா அரசு
விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1 லட்சம் இலவச சிகிச்சை: மஹாராஷ்டிரா அரசு
UPDATED : ஏப் 19, 2025 03:51 AM
ADDED : ஏப் 19, 2025 12:38 AM

மும்பை: மஹாராஷ்டிரா அரசு, ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கும் நபர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அபித்கர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஏற்கனவே உள்ள மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் திட்டத்துடன் இணைந்து, மஹாராஷ்டிராவில் மஹாத்மா ஜோதிராவ் புலே ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்குவோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இதற்காக காப்பீடு திட்டத்தில், 3,000 மருத்துவமனைகள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள், படுக்கை விபரங்கள், புகார்கள் பதிவு ஆகியவற்றுக்கு தனி செயலி உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

