sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாயை கொன்று ஆட்டோவில் கட்டி இழுத்து சென்றவர் கைது

/

நாயை கொன்று ஆட்டோவில் கட்டி இழுத்து சென்றவர் கைது

நாயை கொன்று ஆட்டோவில் கட்டி இழுத்து சென்றவர் கைது

நாயை கொன்று ஆட்டோவில் கட்டி இழுத்து சென்றவர் கைது


ADDED : ஜன 20, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: தெரு நாயை கல்லால் அடித்து கொன்ற நபர் ஒருவர், அதனை ஆட்டோவில் கட்டி இழுத்து சென்றதை, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா கண்டித்தார். சம்பவத்துக்கு காரணமானவர் கைது செய்யப்பட்டார்,

ஷிவமொக்கா, ஹொசநகரின், ரிப்பன்பேட்டின், கெஞ்சனாளா கிராமத்தின் ரயில் நிலையம் அருகில், நேற்று காலை தெரு நாய் ஒன்று படுத்திருந்தது.

அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் வாஜித், 35, தெரு நாய் மீது கல்லை போட்டார். இதே போன்று, மூன்று முறை கல்லை போட்டு கொன்றார்.

நாயின் உடலை தன் ஆட்டோவின் பின்புறம் கட்டி, இழுத்து சென்றார். இதை கண்ட அப்பகுதி இளைஞர், தன் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதலங்களில் வெளியிட்டார். இது வேகமாக பரவியது.

இதை முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய பிராணிகள் நலன் அமைப்பு செயலருமான மேனகாவுக்கும், 'இ - மெயில்' மூலம் அனுப்பினார்.

கோபமடைந்த அவர், மாநில பிராணிகள் நலவாரியத்தை தொடர்பு கொண்டு, ஆட்டோ ஓட்டுநர் மீது புகார் அளிக்கும்படி வலியுறுத்தினார். ஷிவமொக்கா எஸ்.பி.,யிடமும் பேசினார்.

அதன்பின் விழித்து கொண்ட பிராணிகள் நல வாரியத்தினர், கால்நடைத் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

அதிகாரிகளும் ஹொசநகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து, வாஜித்தை கைது செய்தனர்.

தன் வீட்டில் வளர்த்த கோழிகளை நாய் தின்றதால், கோபமடைந்து நாயை கொன்றதாக விசாரணையில் ஒப்பு கொண்டார்.






      Dinamalar
      Follow us