ADDED : நவ 03, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: விபத்து வழக்கில், 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லியை சேர்ந்த விகாஸ், 19, கடந்த 2015ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தார். பத்தாண்டுகளாக தலைமறைவாக இருக்கும் விகாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதுடில்லி ஹஸ்த்சல் விஹாரில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்த விகாஸ், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

