sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

/

 கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

 கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

 கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை


ADDED : நவ 25, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: கொலை வழக்கில் தேடப்பட்டவர், போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் தூல்கா கிராமத்தில், மளிகைக் கடை நடத்தும் மஞ்சித் சிங், 16ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், ராஜன் என்ற பில்லா என்ற ரவுடியை தேடி வந்தனர்.

அமிர்தசரஸின் ரய்யா பகுதியில் ராஜன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார், ரய்யாவில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு பைக்கில் ராஜன் சென்றார். வண்டியை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், பைக்கை வேகமாக செலுத்தி ராஜன் தப்ப முயன்றார். மேலும், போலீசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

போலீஸ் கொடுத்த பதிலடியில், உடலில் குண்டு பாய்ந்த ராஜன், சரிந்து விழுந்தார். உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இந்தச் சண்டையில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.






      Dinamalar
      Follow us