sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.2 கோடி நகைகளை பஸ்சில் கடத்தியவர் கைது

/

ரூ.2 கோடி நகைகளை பஸ்சில் கடத்தியவர் கைது

ரூ.2 கோடி நகைகளை பஸ்சில் கடத்தியவர் கைது

ரூ.2 கோடி நகைகளை பஸ்சில் கடத்தியவர் கைது


ADDED : அக் 05, 2024 10:57 PM

Google News

ADDED : அக் 05, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட்: மும்பையில் இருந்து தார்வாடுக்கு ஆம்னி பஸ்சில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் இருந்து தார்வாடுக்கு, ஆம்னி பஸ்சில் தங்க நகைகள், பணம் கடத்தி வரப்படுவதாக தார்வாட் ரூரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை தார்வாட் அருகே நரேந்திரா கிராஸ் பகுதியில், வாகன சோதனை நடத்தினர். அங்கு வந்த, ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.

லக்கேஜ் வைக்கும் இடத்தில், ஒரு சூட்கேசுக்குள் இருந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சூட்கேசை கொண்டு வந்த, ராஜஸ்தான் மாநிலத்தின் பவர்சிங் சவுகான், 48, கைது செய்யப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வெள்ளிப் பொருட்கள் 1,237 கிராம் இருந்தன.

அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர். ஹூப்பள்ளியில் வசிக்கும் பவர்சிங், கூரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

தன்னுடன் வேலை செய்யும் நர்பால்சிங் பலோத் என்பவர் கூறியதன்பேரில், மும்பைக்கு சென்று நகை, வெள்ளிப் பொருட்களை வாங்கி வந்தது தெரிந்தது. நர்பால்சிங்கை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us