மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் 21-ம் தேதி வரை நீட்டிப்பு
மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் 21-ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : மே 09, 2024 01:04 AM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் 21-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கடந்த 2023 பிப்வரியில் கைது செய்தது. திகார் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் மதுபான கொள்கை வழக்கில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 9 ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவலில் உள்ளார்.
மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் நேற்று டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.