sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ. 2,000 கோடி வகுப்பறை ஊழல் வழக்கு மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு 'சம்மன்'

/

ரூ. 2,000 கோடி வகுப்பறை ஊழல் வழக்கு மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு 'சம்மன்'

ரூ. 2,000 கோடி வகுப்பறை ஊழல் வழக்கு மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு 'சம்மன்'

ரூ. 2,000 கோடி வகுப்பறை ஊழல் வழக்கு மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு 'சம்மன்'


ADDED : ஜூன் 04, 2025 08:38 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில், 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு ஊழல் தடுப்புப் பிரிவு 'சம்மன்' அனுப்பியுள்ளது.

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் நிதி மற்றும் கல்வித் துறைகளை அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நிர்வகித்தார். பொதுப்பணித் துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்தார்.

அவர்களுடைய பதவிக் காலத்தில், அரசுப் பள்ளிகளில், 12,000 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் கட்டப்பட்டன.

இந்தக் கட்டுமானப் பணிகளில், 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் கபில் மிஸ்ரா, ஹரீஷ் குரானா, நீல்காந்த் பட்சி ஆகியோர், ஊழல் தடுப்புப் பிரிவில், 2019ம் ஆண்டு புகார் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் ஏப்ரல் 30ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஊழல் தொடர்பான விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின், 6ம் தேதியும், மணீஷ் சிசோடியா, 9ம் தேதியும் ஆஜராகுமாறு, ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, ஊழல் தடுப்புப் பிரிவு இணைக் கமிஷனர் மது வர்மா கூறியதாவது:

இந்த ஊழல் புகார் விவகாரத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின், தலைமை தொழில்நுட்ப ஆய்வாளர் அளித்துள்ள அறிக்கை மூன்று ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17--ஏ,யின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகே இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் சூழ்ச்சி


ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கை:ஊழல் தடுப்புப் பிரிவை, பா.ஜ., அரசு கருவியாகப் பயன்படுத்துகிறது.ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் தூய்மையான அரசியவாதிகள். வகுப்பறை கட்டியதில் எந்த ஊழலும் நடக்கவில்லை. பா.ஜ.,வின் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி. எங்கள் கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளை முடக்க நினைக்கின்றனர்.
ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரங்களைப் பறிக்க பா.ஜ., திட்டமிட்டது. இன்று, அக்கட்சியே, அதை கருவியாக பயன்படுத்துகிறது.பா.ஜ.,வுக்கு டில்லி மக்கள் நலனுக்காக ஆட்சி செய்யும் எண்ணம் இல்லை. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க ஐந்தாண்டு காலத்தையும் செலவழிப்பர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us