ADDED : ஆக 28, 2011 09:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினார்.
அன்னா ஹசாரே நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டத்தால், பார்லிமென்டில் லோக்பால் மசோதா குறித்த விவாதம் கடந்த வாரம் நடந்தது. ஜனாதிபதியை நேற்று சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், லோக்பால் விவாதம் குறித்தும், ஹசாரே கோரிக்கை தொடர்பான தீர்மானம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தார். ஜனாதிபதியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அரை மணி நேரம் உரையாடியதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.