sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்

/

மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்

மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்

மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்


ADDED : ஏப் 18, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் துவங்குகிறது.

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை கடைசியாக, 2019-ல் நடந்தது. அதன்பிறகு, கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது.

மானசரோவர் ஏரி, சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் இருப்பதே இதற்கு காரணம். கடந்த அக்டோபரில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்திய - சீன எல்லையில் ராணுவத்தை திரும்பப் பெற இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இதன் தொடர்ச்சியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை இந்த ஆண்டு மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நம் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''இந்தியா - -சீனா இடையே விமான சேவையை மீண்டும் துவங்க கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.

''மேலும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் துவங்குவது குறித்தும் இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. எனவே, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை விரைவில் துவங்கப்பட வாய்ப்புள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us