sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை

/

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை

1


ADDED : ஏப் 21, 2025 09:53 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 09:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ மாவட்டத்தில் உள்ள லூகு மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கிய இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன், பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடத்தினர். பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதால், பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

8 பேர் உடல்கள் மீட்பு

இது குறித்து ஜார்க்கண்ட் டி.ஜி.பி., கூறியதாவது: பொகாரோ மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் விவேக் கொல்லப்பட்டார். இதுவரை மாவோயிஸ்டுகள் 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, என்றார்.






      Dinamalar
      Follow us