sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு ஒப்புதல்

/

மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு ஒப்புதல்

மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு ஒப்புதல்

மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு ஒப்புதல்


ADDED : ஆக 09, 2025 07:14 AM

Google News

ADDED : ஆக 09, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினம் செல்ல இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் வைத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 332ஏ, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. அப்போது, மரக்காணம் - புதுச்சேரி இடையே, 46 கி.மீ., தொலைவுக்கு, 2,157 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:


மரக்காணம் -- புதுச்சேரி நான்கு வழிச்சாலை நிறைவடைந்தால் அது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்தும்; வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான புதிய வழிகளும் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us