sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

607 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியை முறைப்படுத்தியது எம்.சி.டி.,

/

607 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியை முறைப்படுத்தியது எம்.சி.டி.,

607 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியை முறைப்படுத்தியது எம்.சி.டி.,

607 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியை முறைப்படுத்தியது எம்.சி.டி.,


ADDED : அக் 17, 2024 09:36 PM

Google News

ADDED : அக் 17, 2024 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திரபிரஸ்தா:சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 607 துப்புரவுத் தொழிலாளர்களின் பணியை எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி முறைப்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, டில்லி மாநகராட்சியிலும் ஆட்சி வகிக்கிறது. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை கவுரவப் பிரச்னையாக ஆம் ஆத்மி கருதுகிறது.

இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென அக்கட்சித் தலைவர்கள் விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்க ஆம் ஆத்மி அரசும் மாநகராட்சி நிர்வாகமும் தயாராகி வருகின்றன.

இதன் ஒருபகுதியாக ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வரும் 607 பேரின் பணியை முறைப்படுத்த எம்.சி.டி., முடிவு செய்தது.

இவர்களுக்கான பணியை நிரந்தரம் செய்வதுடன் அவர்களின் தகுதிக்கேற்ற வேலையை வழங்க மாநகராட்சி முன்வந்தது. இவர்களுக்கு தகுந்த பணியை வழங்குவதற்கான விழா நேற்று முன்தினம் நடந்தது.

விழாவில் முதல்வர் ஆதிஷி கலந்து கொண்டு, பணியாளர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.






      Dinamalar
      Follow us