sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆப்கன் அமைச்சர் நிருபர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

/

ஆப்கன் அமைச்சர் நிருபர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ஆப்கன் அமைச்சர் நிருபர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ஆப்கன் அமைச்சர் நிருபர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்


ADDED : அக் 11, 2025 05:50 PM

Google News

ADDED : அக் 11, 2025 05:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; ஆப்கன் வெளியுறவு அமைச்சர் டில்லியில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் எந்த பங்கும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தலைநகர் டில்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. அவர் நேற்றைய தினம், டில்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் நிருபர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே நிருபர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இந் நிலையில், இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

நேற்றைய ஆப்கன் வெளியுறவு அமைச்சர் டில்லியில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் பங்கு எதுவும் இல்லை. அந்த நிகழ்வு தூதரகத்தின் கட்டுப்பாட்டில் நடந்தது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக பெண் நிருபர்கள் பங்களிப்பு இல்லாத நிருபர்கள் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், திரிணமுல் எம்பி மஹூவா மொய்தரா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களையும் எழுப்பி இருந்தனர்.






      Dinamalar
      Follow us