sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மக்கள் மனதை மாற்றவே சென்னையில் கூட்டம்: மத்திய அமைச்சர்

/

மக்கள் மனதை மாற்றவே சென்னையில் கூட்டம்: மத்திய அமைச்சர்

மக்கள் மனதை மாற்றவே சென்னையில் கூட்டம்: மத்திய அமைச்சர்

மக்கள் மனதை மாற்றவே சென்னையில் கூட்டம்: மத்திய அமைச்சர்


UPDATED : மார் 22, 2025 10:22 PM

ADDED : மார் 22, 2025 10:21 PM

Google News

UPDATED : மார் 22, 2025 10:22 PM ADDED : மார் 22, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் உள்ளதால், அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜ.,வை விமர்சித்து தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினும் சில கட்சிகளும் இன்று ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளனர். காங்கிரஸ், திமுக, பிஆர்எஸ் கட்சிகளிடம் நான் ஒன்று கேட்க விரும்புவது, லோக்சபா தொகுதி எம்.பி., மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எங்காவது ஆலோசனை நடத்தியதா?

கடந்த 4.5 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் ஊழலில் மூழ்கி உள்ளார். வரும் தேர்தலில், அவருக்கு எதிராக மக்கள் உள்ளனர். இதனை மாற்றுவதற்காக தொகுதி மறுசீரமைப்பு குறித்து என்ற பெயரில் பா.ஜ.,வை விமர்சித்து கூட்டம் நடத்துகிறார்.

எல்லை நிர்ணயம், தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி பிரச்னையா என மக்களிடம் கேட்க விரும்புகிறேன். பா.ஜ. அனைத்து மாநிலங்களுக்கும் நீதி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us