ADDED : ஜன 13, 2025 06:19 AM

பாலக்காடு; பாலக்காட்டில் என்.எஸ்.எஸ்., யூனியனின் சார்பில் நடந்த, 'மெகா திருவாதிரைக்களி' நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு தாலுகா என்.எஸ்.எஸ்., (நாயர் சர்வீஸ் சொசைட்டி) என்ற அமைப்பின், 70ம் ஆண்டு விழா நேற்று மாலை கோட்டை மைதானத்தில் நடந்தன.
விழாவை அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் உதயபானு துவக்கி வைத்தார். பாலக்காடு தாலுகா தலைவர் கே.கே., மேனன் தலைமை வகித்தார்.
பாலக்காடு தொகுதி எம்.பி., ஸ்ரீகண்டன் மற்றும் எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டம் ஆகியோர் பங்கேற்றனர். செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். விழாவையொட்டி கேரள பாரம்பரிய நடனமான 'மெகா திருவாதிரைக்களி' நடந்தது.
'வானவில் வண்ணங்கள்' என்ற தலைப்பில் நடந்த இந்த நடனத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, யூனியனைச்சேர்ந்த 1770 மகளிர் கலந்து கொண்டனர். இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.