sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பங்காரப்பா வசித்த வீடு சிவகுமாரின் நினைவுகள்

/

பங்காரப்பா வசித்த வீடு சிவகுமாரின் நினைவுகள்

பங்காரப்பா வசித்த வீடு சிவகுமாரின் நினைவுகள்

பங்காரப்பா வசித்த வீடு சிவகுமாரின் நினைவுகள்


ADDED : பிப் 26, 2024 07:16 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: ''நான் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் சீடன். அவர் வசித்த வீட்டையே பெற்றுக்கொண்டேன்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:

நான் குடியேற உள்ள அரசு பங்களாவை தேர்வு செய்ததற்கு, முன்னாள் முதல்வர் பங்காரப்பாவே காரணம்.

நான் அவரது சீடன். அவர் வசித்த வீட்டிலேயே வசிக்க வேண்டும் என்ற ஆசையால், அந்த வீட்டை பெற்றுக்கொண்டேன்.

பெங்களூரின், குமாரகிருபாவில் உள்ள அரசு பங்களாவில், முதல்வர் சித்தராமையா வசித்தார். அவர் வசிக்கிறார் என்ற காரணத்தால், அந்த பங்களாவை பெறவில்லை.

பங்காரப்பா காங்கிரஸ் தலைவராக இருந்தவர். முதல்வர், வருவாய் உட்பட பல்வேறு துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

குமாரகிருபாவில் உள்ள அரசு பங்களாவில், அவர் வசித்தார். நான் அவரை சந்திக்க செல்லும் போது, அவருக்காக, அங்குள்ள மாமரத்தின் கீழே காத்திருப்பேன்.

அதை நினைவுகூரும் வகையில், அதே வீட்டில் குடியேற உள்ளேன். அந்த வீட்டில் பூஜை செய்துள்ளேன்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us