sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் கால்பந்து போட்டி: மெஸ்ஸி ஆட்டம் உறுதி செய்தது அர்ஜென்டினா

/

கேரளாவில் கால்பந்து போட்டி: மெஸ்ஸி ஆட்டம் உறுதி செய்தது அர்ஜென்டினா

கேரளாவில் கால்பந்து போட்டி: மெஸ்ஸி ஆட்டம் உறுதி செய்தது அர்ஜென்டினா

கேரளாவில் கால்பந்து போட்டி: மெஸ்ஸி ஆட்டம் உறுதி செய்தது அர்ஜென்டினா

1


ADDED : ஆக 23, 2025 01:49 PM

Google News

1

ADDED : ஆக 23, 2025 01:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடும் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.

உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது அர்ஜென்டினா (1978, 1986, 2022). இதையடுத்து கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டி நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) உலக கால்பந்து சாம்பியன் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடுவதை உறுதி செய்துள்ளது.

இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடும்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெஸ்ஸியின் இந்திய பயணத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us