sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ராணுவ வலிமை முக்கியம்: விமானப்படை தளபதி

/

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ராணுவ வலிமை முக்கியம்: விமானப்படை தளபதி

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ராணுவ வலிமை முக்கியம்: விமானப்படை தளபதி

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ராணுவ வலிமை முக்கியம்: விமானப்படை தளபதி


ADDED : ஜன 21, 2026 04:33 PM

Google News

ADDED : ஜன 21, 2026 04:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க பொருளாதார வலிமை மட்டும் போதாது. தேச பாதுகாப்புக்கு ராணுவ வலிமையும் முக்கியம் என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த மாநாட்டில் அவர் பேசியதாவது: தேச பாதுகாப்பிற்கு முக்கியமானதாக ராணுவ வலிமை உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்க முடியும். ஆனால், பாதுகாப்பாக இருக்க முடியாது. இதற்கு நமது நாட்டிலேயே உதாரணம் உள்ளது. நாமும் சீனாவும் ஒரு காலத்தில் உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை கட்டுப்படுத்தினோம். ஆனால், அது நம்மை காலனித்துவப்படுத்துவதைத் தடுக்கவில்லை. இந்த சக்திகளில்ஏதேனும் ஒன்று மிகவும் முக்கியமானது. ஆனால்,அதை காட்டிலும் ராணுவ வலிமை முக்கியம்.

இல்லையென்றால் நாம் யாராலும் அடி பணிய வைக்கப்படலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் வெனிசுலா மற்றும் ஈராக் ஆகியவை. ராணுவ சக்தி தான் முக்கியமானது. அதை விட முக்கியம் அந்த ராணுவ சக்தியை பயன்படுத்துவதற்கான விருப்பம்.

ராணுவ பலத்தை காட்ட விருப்பம் இல்லை என்றாலும், தொடர்ந்து நிதானத்தை காட்டலாம், ஆனால்,அநு்த கட்டுப்பாடு ஒரு பலவீனமாகக் கருதப்படும். நீங்கள் வலிமையுடன்இருக்கும் போது , நீங்கள் நிதானத்தை காட்டும்போதுதான், அது திறமையாக பார்க்கப்படும்.

இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள் பெரும்பாலும், அதன் அண்டை நாடுகளில் ஏற்படும் நிகழ்வுகளால் வடிவமைக்கப்படுகிறது. சில நேரங்களில்எதிர்வினையாற்றும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us