ADDED : ஜன 15, 2024 09:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுடான பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இது குறித்து மோடி தனது ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது,
ரஷ்ய அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுபடுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சினைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு மோடி ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.