ADDED : மார் 21, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில், ஸ்டேஷன் சாலையில் உள்ள தலைமை அலுவலகம், ஹளே ஹூப்பள்ளி துணை தபால் அலுவலகம் உட்பட, பல்வேறு தபால் அலுவலகங்களில், கடந்த சில நாட்களாக பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது.
'தபால் அலுவலகங்களில், சேமிப்புக் கணக்கு வைத்துள்ள பி.பி.எல்., குடும்பத்தின் பெண்களுக்கு, 'மோடி கேரண்டி' திட்டத்தின் கீழ், 3,000 ரூபாய் செலுத்தப்படுகிறது.
மோடி கார்டு வைத்துள்ளோருக்கு மட்டுமே, பணம் கிடைக்கும். மார்ச் 23க்குள் கார்டு வாங்கிக் கொண்டால்தான், பணம் செலுத்தப்படும்' என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
எனவே தபால் அலுவலகங்களில், மோடி கார்டு கேட்டு பெண்கள் குவிகின்றனர். 'பணம் எதுவும் வராது. இது வதந்தி. இதை நம்பாதீர்கள்' என, கூறினாலும் பெண்கள் பொருட்படுத்தவில்லை.

