sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குழந்தை பெற்றெடுத்த தாய், குழந்தை மரணம்

/

குழந்தை பெற்றெடுத்த தாய், குழந்தை மரணம்

குழந்தை பெற்றெடுத்த தாய், குழந்தை மரணம்

குழந்தை பெற்றெடுத்த தாய், குழந்தை மரணம்


ADDED : ஜன 02, 2025 05:45 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர்: ராய்ச்சூர், தேவதுர்கா தாலுகாவில் உள்ள மசீதாபுரா கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்மா, 22. இவர் பிரசவத்திற்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின்போது, அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. இதனால் டிச., 27 ம் தேதி அன்று, ராய்ச்சூர் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வரும் வழியில் ஆறு முறை ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவலிங்கம்மா, உயர் ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அவருக்கு சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போதும் அதிகமான ரத்தம் வெளியேறியது. இதனால், அவரின் உடல் நிலை மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார். இதே போன்று குழந்தையும் இறந்தது.

ராய்ச்சூர் ரிம்ஸ் மருத்துவமனையில் சிசேரியன் செய்யப்பட்ட பெண்ணும், பெண் குழந்தையும் இறந்தனர்.






      Dinamalar
      Follow us