ADDED : பிப் 14, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலியா:உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர்.
உ.பி., மாநிலம் பலியா மாவட்டம் கிஜிர்பூர் கிராமத்தில் வசித்தவர் பிந்தா தேவி, 55; அவரது மகன் உமேஷ் யாதவ், 30.
இருவரும் நேற்று, பைக்கில் சென்றனர். அப்போது எதிரில் வந்த வேன் பைக் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்டதும், வேன் டிரைவர் தப்பி ஓடினார். தகவல் அறிந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்குக் அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

