sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாய் கழுத்தறுத்து கொலை

/

மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாய் கழுத்தறுத்து கொலை

மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாய் கழுத்தறுத்து கொலை

மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாய் கழுத்தறுத்து கொலை


ADDED : அக் 31, 2025 01:15 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: வீட்டில் மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாயின் கழுத்தை அறுத்து கொன்று, எரிக்க முயன்ற கடலோர பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே நேமம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி, 74. திருவனந்தபுரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் அஜய் குமார், 58, கடலோர பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி.

குடிபோதைக்கு அடிமையான அஜய்குமார், பலமுறை போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டும் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால் மனைவி பிரிந்து சென்ற நிலையில், தாயுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு வழக்கம் போல் வீட்டில் அஜய் குமார் மது அருந்தினார். இதற்கு விஜயகுமாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆத்திரமுற்ற அஜய் குமார் கத்தியால் தாயை சரமாரியாக குத்தினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார். தொடர்ந்து, மதுவை அவரது உடலில் ஊற்றி எரிக்க முயன்றார். தகவலறிந்த நேமம் போலீசார், விஜயகுமாரியின் உடலை மீட்டு, அஜய்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us