முல்லைப் பெரியாறில் புதிய அணை: லோக்சபாவில் காங்., எம்.பி., குதர்க்க பேச்சு
முல்லைப் பெரியாறில் புதிய அணை: லோக்சபாவில் காங்., எம்.பி., குதர்க்க பேச்சு
ADDED : ஆக 09, 2024 03:47 PM

புதுடில்லி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., ஹிபி ஏடன் பேசியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்காக அணை பலவீனமாக உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது என அடிக்கடி சொல்லி வருகிறது. ஆனால், அணை பலமாக உள்ளதால், புதிய அணை தேவையில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக சொல்லி உள்ளது. நிபுணர்கள் ஆய்விலும் அணை பலமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லோக்சபாவில் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஹிபி ஏடன் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையால், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு பாதுகாப்பு என்பதே எங்களின் குறிக்கோள் . இவ்வாறு அவர் பேசினார்.
திமுக பதில் என்ன
தமிழகத்தின் நலனுக்கு எதிராக கேரள காங்., எம்பி பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் காங்., கூட்டணி வைத்துள்ளது. இப்படி கூட்டணி கட்சி எம்பியே தமிழகத்திற்கு எதிராக பேசும்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று விமர்சனம் எழுந்துள்ளது.