sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

/

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

8


ADDED : ஜூலை 22, 2025 07:15 PM

Google News

8

ADDED : ஜூலை 22, 2025 07:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 2006ல் நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளையும் விடுவித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது.

கடந்த ஜூலை 11, 2006 அன்று மும்பையின் மேற்கு ரயில்வே உள்ளூர் பாதையில் 7 குண்டுவெடிப்புகளை சதி செய்து செயல்படுத்திய சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 5 குற்றவாளிகளுக்கு (ஒருவர் உயிரிழப்பு) துாக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. இது தொடர்பான அப்பீல் வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நேற்று ரத்து செய்தது. குற்றவாளிகளை விடுவித்தும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மஹராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படை பிரிவு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. வழக்கை வரும் 24 ம் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

மஹாராஷ்டிர ஏ.டி.எஸ். சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விஷயத்தின் அவசரத்தைக் காரணம் காட்டி, அவசர விசாரணையை கோரியதைத் தொடர்ந்து வழக்கு பட்டியல் இடப்பட்டது.






      Dinamalar
      Follow us