sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 குட்டிகளை ஈன்றெடுத்த நமீபியா சிவிங்கி புலி

/

3 குட்டிகளை ஈன்றெடுத்த நமீபியா சிவிங்கி புலி

3 குட்டிகளை ஈன்றெடுத்த நமீபியா சிவிங்கி புலி

3 குட்டிகளை ஈன்றெடுத்த நமீபியா சிவிங்கி புலி


ADDED : ஜன 04, 2024 01:51 AM

Google News

ADDED : ஜன 04, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் நமீபியா சிவிங்கி புலி, மூன்று குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.

நம் நாட்டில் வாழ்ந்து வந்த சிவிங்கி புலிகள் இனம் அழிந்ததை அடுத்து, அவற்றை மீண்டும் கொண்டு வரும் முயற்சியை 2022ல் மத்திய அரசு முன்னெடுத்தது.

தென் ஆப்ரிக்க நாடான நமீபியா மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து, 20 சிவிங்கி புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இவை முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் நமீபியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஜுவாலா என்ற சிவிங்கி புலி நான்கு குட்டிகளை ஈன்றது.

இதில் மூன்று குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, மீதமுள்ள குட்டி பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆறு பெரிய சிவிங்கி புலிகளும் அடுத்தடுத்து இறந்தன.

இந்நிலையில், நமீபியாவில் எடுத்து வரப்பட்ட ஆஷா என்ற சிவிங்கி புலி சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.

இதை தன் சமூக வலைதள பக்கத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us