sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேஜஸ் போர் விமான விபத்தில் பலியான விமானி இவர் தான்; வெளியானது போட்டோ

/

தேஜஸ் போர் விமான விபத்தில் பலியான விமானி இவர் தான்; வெளியானது போட்டோ

தேஜஸ் போர் விமான விபத்தில் பலியான விமானி இவர் தான்; வெளியானது போட்டோ

தேஜஸ் போர் விமான விபத்தில் பலியான விமானி இவர் தான்; வெளியானது போட்டோ


ADDED : நவ 21, 2025 10:08 PM

Google News

ADDED : நவ 21, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: தேஜஸ் போர் விமான விபத்தில் பலியான விமானி யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. விமானியின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்றிருந்தன. இந்தியாவின் தரப்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் வானில் பறந்து சாகசம் செய்து கொண்டு இருந்தது.

அப்போது எதிர்பாராத தருணத்தில் இந்த விமானம் தரையிறங்க தொடங்கிய போது கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் இருந்த விமானி உயிரிழந்தார். விமான விபத்தை உறுதி செய்த இந்திய விமானப்படை அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.

ஆனால் உயிரிழந்த விமானியை பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந் நிலையில், விமானி யார் என்ற விவரத்தை இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் விங் கமாண்டர் நமன் சியால். இமாச்சல பிரதேசம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்த விபரத்தை குறிப்பிட்டு முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் விமான விபத்தில் இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த துணிச்சலான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்த செய்தி மிகவும் மன வேதனையையும், ஆன்மாவை நொறுக்குவதாகவும் உள்ளது.

நம் தேசம் ஒரு துணிச்சலான, கடமை உணர்வு கொண்ட விமானியை இழந்துவிட்டது.

இவ்வாறு அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளார். தமது பதிவில் சுக்விந்தர் சிங், விமானியின் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

யார் இந்த நமன் சியால்?

இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நக்ரோட்டாவைச் சேர்ந்தவர் நமன் சியால்(34). ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றியவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படையில் மூத்த அதிகாரியாக உள்ளார். நமன் சியால் தந்தையும், இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.








      Dinamalar
      Follow us