sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இதிலுமா போலி?: மோடி, அமித்ஷா பெயர்களில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக விண்ணப்பம்

/

இதிலுமா போலி?: மோடி, அமித்ஷா பெயர்களில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக விண்ணப்பம்

இதிலுமா போலி?: மோடி, அமித்ஷா பெயர்களில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக விண்ணப்பம்

இதிலுமா போலி?: மோடி, அமித்ஷா பெயர்களில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக விண்ணப்பம்

6


UPDATED : மே 28, 2024 01:25 PM

ADDED : மே 28, 2024 10:24 AM

Google News

UPDATED : மே 28, 2024 01:25 PM ADDED : மே 28, 2024 10:24 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலி விண்ணப்பங்களும் வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (மே 27) முடிவடைந்தது.

இந்த நிலையில், மொத்தம் 3000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் போலியான விண்ணப்பங்களாக கிடைக்கப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், தோனி உள்ளிட்டோர் பெயரிலெல்லாம் போலியாக விண்ணப்பித்துள்ளனர்.

இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் கூகுள் பார்ம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டதால், போலிகள் அதிகம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க உள்ளது பிசிசிஐ.






      Dinamalar
      Follow us