தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை; அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை; அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
ADDED : ஜூலை 30, 2025 09:11 PM

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் சீனாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பு குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்; இந்தியா மீதான அமெரிக்கா விதித்த வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனைப் பாதுகாக்க அரசு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் போல, இந்த விவகாரத்திலும் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

