" ரோபோக்கள் தேவை" - ஆனந்த் மஹிந்திராவின் தொலைநோக்கு பார்வை
" ரோபோக்கள் தேவை" - ஆனந்த் மஹிந்திராவின் தொலைநோக்கு பார்வை
UPDATED : பிப் 04, 2024 10:37 AM
ADDED : பிப் 03, 2024 01:51 PM

மும்பை: ‛‛ஆறுகளை சுத்தம் செய்யும் ரோபோக்களே தற்போதைய தேவை'' என பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். மேலும், ஆற்றை சுத்தம் செய்யும் ரோபோ ஒன்றின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளையும், புதுமையான கண்டுபிடிப்புகளையும் பதிவிடுவது வழக்கம்

இது போன்ற ரோபோக்களை தற்போதே உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். இது போன்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து முதலீடு செய்ய தயாராக உள்ளேன்'' இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

