ADDED : மார் 02, 2026 01:24 AM

டேராடூன்: நேபாளத்தில் வரும் 5ல் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எல்லைகளை மூட உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், வரும் 5ல் பொதுத்தேர்தல் நடக்கிறது. அந்நாட்டு எல்லையை ஒட்டி உத்தரகண்ட், பீஹார், உத்தர பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், எல்லையோர மாவட்டங்களை இன்று முதல், 5ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, நேபாள எல்லையில் உள்ள பிதோராகர், சம்பாவத் மாவட்ட எல்லைகளை மூட உத்தரகண்ட் பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், 'மத்திய அரசின் உத்தரவுப்படி, நேபாள தேர்தல் முடியும் வரை, பிதோராகர், சம்பாவத் மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

