sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் எம்.பி.,க்களுக்கு புதிய குடியிருப்புகள் திறப்பு

/

டில்லியில் எம்.பி.,க்களுக்கு புதிய குடியிருப்புகள் திறப்பு

டில்லியில் எம்.பி.,க்களுக்கு புதிய குடியிருப்புகள் திறப்பு

டில்லியில் எம்.பி.,க்களுக்கு புதிய குடியிருப்புகள் திறப்பு


ADDED : ஆக 12, 2025 03:04 AM

Google News

ADDED : ஆக 12, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில், எம்.பி.,க்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பை நேற்று திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அவரவர் பண்டிகைகளை குடியிருப்புகளில் கொண்டாடும்படி, எம்.பி.,க்களை கேட்டுக் கொண்டார்.

தலைநகர் டில்லியில், பார்லி., வளாகத்திற்கு அருகே உள்ள பாபா கரக் சிங் மார்க்கில், எம்.பி.,க்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

ஒவ்வொரு குடியிருப்பும், 5,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள நான்கு குடியிருப்பு டவர்களுக்கு, நாட்டின் நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:

பழைய குடியிருப்புகளில் ஏராளமான பிரச்னைகளை எம்.பி.,க்கள் எதிர்கொண்டனர். ஆனால், இந்த புதிய குடியிருப்பில் அவர்களுக்கு எந்த அசவுகரியமும் இருக்காது.

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள் தங்குவர். இது, 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்பதை அடையாளப்படுத்தும்.

மேலும் எம்.பி.,க்கள், அவரவர் பண்டிகைகளை குடியிருப்பு வளாகத்திலேயே கொண்டாட வேண்டும். அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us