sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

/

பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

3


UPDATED : ஏப் 28, 2025 05:13 PM

ADDED : ஏப் 28, 2025 05:09 PM

Google News

UPDATED : ஏப் 28, 2025 05:13 PM ADDED : ஏப் 28, 2025 05:09 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு, மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு நவ., 26ல், மஹாராஷ்டிராவின் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த நாச வேலைக்கு மூளையாக செயல்பட்டவரும், வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்தவருமான தஹாவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார். அவரை, 18 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அவனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. தஹாவூர் ராணாவின் 18 நாள் என். ஐ. ஏ., காவல் இன்றுடன் முடிந்ததும், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ராணாவை மேலும் காவலில் வைத்து விசாரணை நடத்த என். ஐ. ஏ., அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ராணாவுக்கு, மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணாவிடம் பல உண்மை சம்பவங்களை வெளிக் கொண்டுவர என்.ஐ. ஏ., அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us