sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிபா வைரஸை விரட்டி அடிக்கணும்: கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல்; கேரளாவில் கட்டுப்பாடுகள் அமல்!

/

நிபா வைரஸை விரட்டி அடிக்கணும்: கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல்; கேரளாவில் கட்டுப்பாடுகள் அமல்!

நிபா வைரஸை விரட்டி அடிக்கணும்: கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல்; கேரளாவில் கட்டுப்பாடுகள் அமல்!

நிபா வைரஸை விரட்டி அடிக்கணும்: கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல்; கேரளாவில் கட்டுப்பாடுகள் அமல்!

4


ADDED : செப் 16, 2024 12:53 PM

Google News

ADDED : செப் 16, 2024 12:53 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரசால் உயிரிழந்ததை அடுத்து, பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் படித்து வந்தார். அண்மையில் அவர் தமது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். அடுத்த சில நாட்களில் தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் இளைஞர் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது நிபா வைரசால் பலியானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் பரவலை தடுக்க களம் இறங்கும்படி சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

கட்டுபாடுகள் என்னென்ன?


நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வைரஸ் பரவல் தடுக்க இன்று (செப்.,16) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

* பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும்.

* பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

* 'தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். தற்போது 3 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட திருவாலி ஊராட்சியில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியையும் சுகாதாரத் துறையினர் நடத்தி வருகின்றனர். இதற்கு, அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us