sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

/

மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

9


ADDED : ஜூலை 07, 2025 12:51 PM

Google News

9

ADDED : ஜூலை 07, 2025 12:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''மூன்றாம் உலகப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்,'' என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த 'எல்லைகளுக்கு அப்பால்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக, உலகம் முழுவதும் மோதல் சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு

போர்களின் பின்னணியில் எந்த நேரத்திலும் 3ம் உலகப் போர் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்றைய போரில், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் நேரடியாக குறிவைக்கப்படுகிறார்கள்.


சர்வாதிகாரம்

இதற்கெல்லாம் மத்தியில், மனிதகுலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான பிரச்னையை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த பிரச்னைகள் அனைத்தும் உலக அளவில் விவாதிக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் சர்வாதிகாரம், நல்லிணக்கம் மற்றும் அன்பை அழித்து வருகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக போரின் பரிமாணங்கள் மாறிவிட்டன.



புத்தரின் பூமி

ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. டாங்கிகள் மற்றும் பிற வகை விமானங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.

உலகிற்கு உண்மை, அகிம்சை மற்றும் அமைதியை வழங்கிய புத்தரின் பூமி இந்தியா.
இப்போது உலகம் முழுவதும் மோதல் சூழ்நிலை நிலவுகிறது. சர்வதேச முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, விவாதங்களுக்குப் பிறகு எதிர்காலக் கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.






      Dinamalar
      Follow us