sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமான எரிபொருள் உற்பத்தி மையமாகும் பெலகாவி குறித்து நிதின் கட்கரி கணிப்பு

/

விமான எரிபொருள் உற்பத்தி மையமாகும் பெலகாவி குறித்து நிதின் கட்கரி கணிப்பு

விமான எரிபொருள் உற்பத்தி மையமாகும் பெலகாவி குறித்து நிதின் கட்கரி கணிப்பு

விமான எரிபொருள் உற்பத்தி மையமாகும் பெலகாவி குறித்து நிதின் கட்கரி கணிப்பு


ADDED : பிப் 22, 2024 11:26 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: ''பெலகாவி மாவட்டம், எத்னால் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, எதிர்காலத்தில் விமான எரிபொருள் உற்பத்தி மையமாகவும் மாறும்,'' என மத்திய சாலை போக்குவரத்து எட்டு மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தார். இடம்: பெலகாவி. றை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பெலகாவி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், உத்தர கன்னடா, கொப்பால், ராய்ச்சூர், கலபுரகி, பீதர் ஆகிய எட்டு மாவட்டங்ளுக்கு 6,975 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

பின் அவர் பேசியதாவது:

கர்நாடகா மாநிலம் மிகவும் வளமான மாநிலம். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்திய அரசு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

90 சதவீத பணிகள்


மாநிலத்தில் 8,200 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 3 லட்சம் கோடி ரூபாய் செலவில், நெடுஞ்சாலை சீரமைப்பு உட்பட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.

பெலகாவி - ஹுனகுந்த் - ராய்ச்சூர் வழித்தடத்தில் 9,000 கோடி ரூபாயில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி முடிந்த பின், பெலகாவி - ராய்ச்சூர் இடையிலான பயண நேரம் மூன்றரை மணி நேரமாக குறையும்.

பெலகாவி - சங்கேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, ஆறு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதில் அரசு உறுதியாக உள்ளது. வனத்துறையிடம் அனுமதி வழங்குவது, மாநில அரசின் பொறுப்பு.

பெலகாவி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வட்டச்சாலை அமைக்க வேண்டும் என்ற மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடியின் விருப்பம் விரைவில் நிறைவேறும்.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 17,000 கோடி ரூபாய் செலவில் வட்டச்சாலை அமைக்கப்படுகிறது. 2025க்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளது. இது பெங்களூருக்கு மட்டுமல்ல, மாநில மக்களுக்கும் வசதியாக இருக்கும்.

ரூ.3,400 கோடி


பெலகாவி - கோவா பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். இதற்காக, 3,400 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, 17 திட்டங்கள் பொதுப்பணித் துறையிடம் இருந்து கோரப்பட்டு உள்ளன. இவையும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் எத்னால் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கேட்டு கொண்டுள்ளார்.

பெலகாவி மாவட்டம், எத்னால் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, எதிர்காலத்தில் விமான எரிபொருள் உற்பத்தி மையமாகவும் மாறும். இதன் மூலம் பெட்ரோலை விட, குறைந்த விலையில் எத்னால் கிடைக்கும். பெட்ரோலில் எத்னால் சேர்க்கப்படுகிறது. வரும் நாட்களில் டீசலிலும் எத்னால் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய நெடுஞ்சாலை பணிகளை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தார். இடம்: பெலகாவி.

அமைச்சரை பாராட்டிய

சதீஷ் ஜார்கிஹோளிபொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பேசியதாவது:வரும் நாட்களில் மேலும் பல வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஒன்பது மாதங்களில் கட்கரியை ஐந்து முறை சந்தித்து உள்ளேன். மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகளின் ஆட்சி அமையும் போது, இரு அரசுக்கும் இடையே பகை உணர்வு ஏற்படும். ஆனால் நிதின் கட்கரி அப்படி இல்லை. இது நமது சொந்த அரசு என்ற உணர்வை அளிக்கிறது.கட்சியை விட, சாலை மேம்பாட்டு பணிகள் தான் முக்கியம். இதன் காரணமாகவே, பொதுப்பணி துறை, பா.ஜ., - காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு சமமான மானியம் வழங்கி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us