sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

/

பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

3


UPDATED : ஜூலை 08, 2025 01:41 PM

ADDED : ஜூலை 08, 2025 01:34 PM

Google News

3

UPDATED : ஜூலை 08, 2025 01:41 PM ADDED : ஜூலை 08, 2025 01:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா; பீஹாரில் அனைத்து துறை அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீஹாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் இந்த தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந் நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீஹார் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளதாவது;

இதற்காக பீஹார் இளைஞர் ஆணையத்தை அமைக்கலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைப்பானது மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அதிகாரம் பெற்ற, திறமையானவர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்குவதே இந்த ஆணையத்தின் நோக்கம்.

மது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை தடுக்க திட்டங்கள் வகுப்பதும் ஆணையத்தின் பணிகளாகும்.

மாநிலத்தில் அதிக பெண்கள் பணியிடத்தில் நுழைந்து ஆட்சி, நிர்வாகத்தில் பெரிய பங்கு வகிப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், இரு துணைத் தலைவர்கள், 7 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். அனைவருமே 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us