sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலியல் குற்றங்களுக்கு இனி தூக்கு தான்: மேற்கு வங்கத்தில் மசோதா தாக்கல்

/

பாலியல் குற்றங்களுக்கு இனி தூக்கு தான்: மேற்கு வங்கத்தில் மசோதா தாக்கல்

பாலியல் குற்றங்களுக்கு இனி தூக்கு தான்: மேற்கு வங்கத்தில் மசோதா தாக்கல்

பாலியல் குற்றங்களுக்கு இனி தூக்கு தான்: மேற்கு வங்கத்தில் மசோதா தாக்கல்

31


ADDED : செப் 03, 2024 02:10 PM

Google News

ADDED : செப் 03, 2024 02:10 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம் என மம்தா பானர்ஜி சட்டசபையில் பேசினார்.

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 நாட்களாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மம்தா பேச்சு

மேற்குவங்க சிறப்பு சட்டசபை கூட்டத்தில் இன்று (செப்.,03) பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். மேற்குவங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியை பெறுகின்றனர்.

புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை மனித குலத்திற்கு எதிரானவை. சமூக சீர்திருத்தங்கள் தேவை. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.






      Dinamalar
      Follow us