sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'என்னை யாரும் நீக்கவில்லை; நானே தான் விலகினேன்'; மவுனம் கலைத்தார் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா!

/

'என்னை யாரும் நீக்கவில்லை; நானே தான் விலகினேன்'; மவுனம் கலைத்தார் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா!

'என்னை யாரும் நீக்கவில்லை; நானே தான் விலகினேன்'; மவுனம் கலைத்தார் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா!

'என்னை யாரும் நீக்கவில்லை; நானே தான் விலகினேன்'; மவுனம் கலைத்தார் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா!

2


UPDATED : ஜன 04, 2025 09:45 AM

ADDED : ஜன 04, 2025 09:37 AM

Google News

UPDATED : ஜன 04, 2025 09:45 AM ADDED : ஜன 04, 2025 09:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'முக்கியமான சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து, என்னை யாரும் நீக்கவில்லை; பார்மில் இல்லாத காரணத்தால் நானேதான் விலகினேன்' என கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

சிட்னியில் இந்திய அணியின் 'டிரஸ்சிங் ரூமிற்கு' வெளியே விரக்தியுடன் அமர்ந்திருந்த ரோகித் சர்மாவை பார்க்கவே பாவமாக இருந்தது. கடந்த ஆண்டு 'டி-20' உலக கோப்பையை கம்பீரமாக கையில் ஏந்திய இவருக்கு, இந்த ஆண்டு துவக்கமே சரியில்லை. மோசமான 'பார்ம்' காரணமாக, அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடர் ரோகித் சர்மாவுக்கு 37, சோதனையாக அமைந்தது. 5 இன்னிங்சில் 31 ரன் (சராசரி 6.20) தான் எடுத்தார்.

இது குறித்து, ரோகித் சர்மா அளித்த விளக்கம்: முக்கியமான சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து, என்னை யாரும் நீக்கவில்லை. பார்மில் இல்லாத காரணத்தால் நானேதான் விலகினேன். மீண்டும் பார்முக்கு திரும்புவேன். என் முடிவை கம்பீர், அகர்கர் ஏற்றுக்கொண்டனர். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது.

ஆஸ்திரேலிய தொடருடன் நான் ஓய்வு பெறப்போவதாக அறிவிக்கவில்லை. ஓய்வு பெறுவதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன், அவர்களின் ஆதரவு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது ஒரு குழு விளையாட்டு, நீங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் சிட்னிக்கு வந்தவுடனே வெளியில் உட்கார முடிவு செய்தேன். எனது எதிர்காலத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது, யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us