sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை: நடிகர் நாகார்ஜுனா வேதனை

/

ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை: நடிகர் நாகார்ஜுனா வேதனை

ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை: நடிகர் நாகார்ஜுனா வேதனை

ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை: நடிகர் நாகார்ஜுனா வேதனை

1


ADDED : ஆக 24, 2024 07:24 PM

Google News

ADDED : ஆக 24, 2024 07:24 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என நடிகர் நாகார்ஜூனா வேதனை அடைந்தார். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்ற நீதிபதி வினோத்குமார் 'என் கன்வென்ஷன் சென்டர் கட்டிட இடிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற பிரம்மாண்ட அரங்கம், ஹைதராபாத்தில் மாதப்பூர் பகுதியில் உள்ளது. ஏரியை ஆக்கிரமித்துக் கட்டுப்பட்டுள்ளது என இன்று காலை அக்கட்டிடத்தை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இடிக்கத்துவங்கியது.

தனக்குச் சொந்தமான கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து எக்ஸ் தளத்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார் நாகார்ஜூனா. அதில், “சட்டத்திற்குப் புறம்பாக இடிக்கப்படுவதால் வேதனை அடைந்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. இன்று காலை இடிப்பு நடத்துவதற்கு முன்பாக எந்த முன் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், எனக்கு எதிராக தீர்ப்பு அளித்திருந்தால் நானே இடிப்பை மேற்கொண்டிருப்பேன்.

வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. எங்களைப் பற்றி எந்த ஒரு தவறான எண்ணமும் வரக் கூடாது என்பதற்காக இதைப் பதிவு செய்கிறேன். அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் தவறான நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திடம் தகுந்த நிவாரணம் கோருவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நாகார்ஜூனா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரித்து நீதிபதி வினோத்குமார் 'என் கன்வென்ஷன் சென்டர் கட்டிட இடிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.






      Dinamalar
      Follow us