sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உணவில் விஷம்: முன்னணி டென்னிஸ் வீரர் பகீர் குற்றச்சாட்டு

/

உணவில் விஷம்: முன்னணி டென்னிஸ் வீரர் பகீர் குற்றச்சாட்டு

உணவில் விஷம்: முன்னணி டென்னிஸ் வீரர் பகீர் குற்றச்சாட்டு

உணவில் விஷம்: முன்னணி டென்னிஸ் வீரர் பகீர் குற்றச்சாட்டு

3


UPDATED : ஜன 10, 2025 11:24 AM

ADDED : ஜன 10, 2025 09:48 AM

Google News

UPDATED : ஜன 10, 2025 11:24 AM ADDED : ஜன 10, 2025 09:48 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கொரோனா காலத்தில் என்னை ஆஸ்திரேலியா போலீசார் மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருந்தபோது விஷத்தன்மை கொண்ட உணவு வழங்கிவிட்டனர். அதை உண்டதால் எனக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டது என முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையம் சென்றார். அப்போது, கோவிட் தொற்று பரவல் சூழல் என்பதால், மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்படாததால் விளையாடுவதைத் தடுத்து, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஒரு சில நாட்கள் அவர் ஆஸ்திரேலியா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜன. 12-26ல் நடக்க உள்ளது. இதற்கான 'டிரா' வெளியானது. இத்தொடரில் 10 முறை கோப்பை வென்றுள்ள, உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச் 37, முதல் சுற்றில் ஆஸ்திரேலிய இளம் வீரர் நிஷேசை எதிர்கொள்கிறார்.

தற்போது, அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: எனக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. இதற்கு கொரோனா காலத்தில் மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எனக்கு தரப்பட்ட விஷத்தன்மை கொண்ட உணவுதான் காரணம்.

நான் செர்பியாவுக்குத் திரும்பி வந்தபோது தான் எனக்கு இது தெரிய வந்தது. இதை நான் யாரிடமும் பகிரங்கமாகச் சொன்னதில்லை. செர்பியாவுக்குத் திரும்பியதும் நடத்தப்பட்ட நச்சு சோதனையில், எனது உடல் ரத்தத்தில் ஈயம், பாதரசம் உள்ளிட்டவை அதிகப்படியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மெல்போர்ன் அல்லது ஆஸ்திரேலியா மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனக்கு மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு முறை நான் ஆஸ்திரேலியா வந்தபோதும், பாஸ்போர்ட் பரிசோதனைக்கு சென்றபோது எனக்கு பழைய நினைவுகள் பெரும் வேதனையை ஏற்படுத்தின. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us