உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தைபயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் அனுமதி
உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தைபயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் அனுமதி
ADDED : நவ 20, 2024 02:08 AM

மாஸ்கோ, :தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள, நீண்ட துார இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த, தங்கள் ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி அளித்து உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்., 22ல் ரஷ்யா போரைத் தொடர்ந்தது.
போர் துவங்கி நேற்றுடன், 1,000 நாட்களாகின்றன. இந்த போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. இந்நிலையில், தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட, மிக நீண்ட துாரத்தில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய ஏவுகணைகளை, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருந்தது. ஆனால், இதைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காமல் இருந்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. ஆசிய நாடான வடகொரியாவின் ராணுவத்தினர், ரஷ்யாவுக்கு உதவ வந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதையடுத்து, தான் வழங்கிய நீண்ட துார இலக்குகளை தாக்கக் கூடிய ஏவுகணைகளை, உக்ரைன் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று முன்தினம் அனுமதி அளித்தார். இதற்கு, ரஷ்யா உடனடியாக கண்டனம்
தொடர்ச்சி 9ம் பக்கம்