sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒடிசா: தலைமை செயலாளராக முதன் முறையாக பெண் ஐ. ஏ.எஸ் அதிகாரி நியமனம்

/

ஒடிசா: தலைமை செயலாளராக முதன் முறையாக பெண் ஐ. ஏ.எஸ் அதிகாரி நியமனம்

ஒடிசா: தலைமை செயலாளராக முதன் முறையாக பெண் ஐ. ஏ.எஸ் அதிகாரி நியமனம்

ஒடிசா: தலைமை செயலாளராக முதன் முறையாக பெண் ஐ. ஏ.எஸ் அதிகாரி நியமனம்


ADDED : டிச 25, 2025 02:49 AM

Google News

ADDED : டிச 25, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர் : ஒடிசா மாநில அரசின் தலைமை செயலாளராக முதன்முறையாக பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஒடிசா மாநில அரசின் தலைமை செயலாளராக உள்ள மனோஜ் அஹூஜா வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய தலைமைசெயலாளராக 1991-ம் ஆண்டை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனு கார்க் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்தவரான அனு கார்க் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 30 வருடங்களுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் தற்போது வளர்ச்சி ஆணையர் ,கூடுதல் தலைமை செயலாளர், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு துறையின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாநிலத்தின் தலைமை செயலாளராக பொறுப்பேற்கும்முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதற்கு முன்னதாகவே , தலைமை செயலாளருக்கு அடுத்த படியாக கருதப்படும் வளர்ச்சி ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கார்க்கின் இந்த பதவி உயர்வு, ஒடிசாவின் நிர்வாக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக 1972-ம் ஆண்டு மாநிலத்தின் முதல்வராக நந்தினி சத்பதி என்ற பெண் முதல்வராக இருந்துள்ளார். மேலும் 2029-இல் ஓய்வு பெறவிருக்கும் கார்க், வரும் புத்தாண்டில் மாநில அரசு ,முக்கிய வளர்ச்சித் திட்டங்களையும், வரவு-செலவுத் திட்ட முயற்சிகளையும் செயல்படுத்தத் தயாராகி வரும் நேரத்தில் இந்த பதவியை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us