sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஆப்பரேஷன் சிந்துார்' விமர்சித்த அதிகாரி கைது

/

'ஆப்பரேஷன் சிந்துார்' விமர்சித்த அதிகாரி கைது

'ஆப்பரேஷன் சிந்துார்' விமர்சித்த அதிகாரி கைது

'ஆப்பரேஷன் சிந்துார்' விமர்சித்த அதிகாரி கைது


ADDED : மே 14, 2025 09:01 PM

Google News

ADDED : மே 14, 2025 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடாட்:நம் பாதுகாப்பு படையினரின் 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசு அதிகாரியை குஜராத் போலீசார் கைது செய்தனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதில், தேச ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் உள்ள துருபனியா கிராம பஞ்சாயத்து அதிகாரி கிரிபால் படேல், 27, என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஆப்பரேஷன் சிந்துார் பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து, படேலின் சமூக வலைதள பதிவை நீக்கியதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தேச ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதும், இந்திய குடிமக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் கிரிபால் படேல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவரை கைது செய்துள்ளோம். இதேபோல் கருத்து பதிவிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us