UPDATED : ஆக 18, 2024 09:42 PM
ADDED : ஆக 18, 2024 06:04 PM

கேரளா பிராமண சபா சார்பில் ஆனந்த குடிர் டிரஸ்ட், பாலக்காட்டில் கட்டிய முதியோர் இல்லத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை அதிகாரி பி ஏ முரளி நேற்று ( ஆக17) திறந்து வைத்தார்.
விழாவில் கேரள மகாஜன சபா நிர்வாகிகள் மற்றும் நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில் ரூ 5. லட்சம் நன்கொடையை முரளி வழங்கினார்.
இந்த இல்லத்திற்கு சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிது சேகர பாரதீ சன்னிதானம், 2020 ம் ஆண்டு, ரூ.50,001 அளித்து அடிக்கல் நாட்டினார்.
சிருங்கேரி சாரதா பீடத்தின் பாலக்காடு கிளையின் ஸ்ரீ சாரதா கோவிலுக்கும், வேத பாடசாலைக்கும் பி ஏ முரளி சென்றார். அப்பாட சாலையில் 40க்கும் மேற்பட்ட வித்தியார்த்திகள் வேதம் பயன்று வருகின்றனர்.
விழாவில் கேரள பிராமண சபா முன்னாள் தலைவர் மற்றும் குளோபல் பிராமணர் கூட்டமைப்பின் தலைவர் கரிம்புழா ராமன் எச் கணேஷ், கேரள பிராமண சபாவின் மாநில தலைவர் ஸ்ரீசிவராம கிருஷ்ணன், கேரள பிராமண சபையின் மாவட்ட தலைவர் என்.ஏ. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை டிரஸ்டின் தலைவர் சிதம்பரநாதன், நிர்வாகிகள் வெங்கடேஸ்வர சர்மா, ஆடிட்டர் வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.

